திங்கள், 7 ஜூன், 2010
ஆஸ்துமாவிற்கு நல்ல தீர்வு
பிரமத்தண்டு பால் 1 துளி கண்ணில் விட்டு வரக் கண் வலி, சதை வளர்தல், கண் சிவத்தல், அரிப்பு, கண் கூச்சம், நீர் வடிதல், கண் எரிச்சல் குணமாகும்.இலை சூரணம், விதை சூரணம் சேர்த்து மிளகளவு 2 வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வர சயம், இருமல், நுரையீரல், சளி இருமல் குணமாகும்.பிரமத்தண்டின் மூலச் சாம்பல் மிளகு அளவு எடுத்து சிறிது தேனில் 2 வேளை சாப்பிட்டு வர இரைப்பிருமல் (ஆஸ்துமா), காசம், கப நோய், நுரையீரல் நோய் குணமாகும்.பிரமத் தண்டின் மூலச் சாம்பலால் பல் தேய்த்து வர பல் ஆட்டம், பல் சொத்தை, சீழ்வடிதல், பல் கரைதல் குணமாகும்.பிரமத்தண்டின் வேரை நிழலில் உலர்த்தி காய வைத்து இடித்துப் பொடியாக்கி சுண்டைக்காய் அளவு வெந்நீரில் சாப்பிட மலப் புழுக்கள் வெளியேறும்.
வெள்ளி, 28 மே, 2010
அம்மை நோயின் தாக்கம் குறைய
தாழம்பூவை துண்டு துண்டாக வெட்டி நீரில் இட்டு காய்ச்ச வேண்டும். நீர் நன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கிய பின் வடிகட்டி, தேவையான சர்க்கரை கூட்டி பாகுபதமாய் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
இதுவே தாழம்பு மணப்பாகு.தாழம்பூ மணப்பாகினை வெயில் காலங்களில் தினசரி உபயோகித்து வர அம்மை நோய் வராமல் தடுக்கலாம்.
அம்மை போடும் போது மருதாணி இலையை அரைத்து இரு பாதங்களிலும் வைத்துக் கட்டி வர அம்மையினால் கண்களுக்கு எந்தவொரு தீங்கும் நேராது. இதனால் அம்மையின் போது ஏற்பட்ட உடல் உஷ்ணம் குறையும்.
வேப்பிலை மிகவும் குளிர்ச்சியான தன்மை கொண்டது. வேப்பிலையுடன் சிறிது மஞ்சளை வைத்து அரைத்து பட்டாணி அளவிற்கு 3 உருண்டைகளை வெறும் வயிற்றில் கொடுத்தால் உடல் குளிர்ச்சி அடையும். அம்மை நோயும் தாக்காது.
இளநீரும், மோரும், அம்மை நோயின் தாக்கத்தை பெருமளவு குறைக்கும். வெறும் வயிற்றில் இளநீர் அருந்துச் செய்வது நல்லது.
இதுவே தாழம்பு மணப்பாகு.தாழம்பூ மணப்பாகினை வெயில் காலங்களில் தினசரி உபயோகித்து வர அம்மை நோய் வராமல் தடுக்கலாம்.
அம்மை போடும் போது மருதாணி இலையை அரைத்து இரு பாதங்களிலும் வைத்துக் கட்டி வர அம்மையினால் கண்களுக்கு எந்தவொரு தீங்கும் நேராது. இதனால் அம்மையின் போது ஏற்பட்ட உடல் உஷ்ணம் குறையும்.
வேப்பிலை மிகவும் குளிர்ச்சியான தன்மை கொண்டது. வேப்பிலையுடன் சிறிது மஞ்சளை வைத்து அரைத்து பட்டாணி அளவிற்கு 3 உருண்டைகளை வெறும் வயிற்றில் கொடுத்தால் உடல் குளிர்ச்சி அடையும். அம்மை நோயும் தாக்காது.
இளநீரும், மோரும், அம்மை நோயின் தாக்கத்தை பெருமளவு குறைக்கும். வெறும் வயிற்றில் இளநீர் அருந்துச் செய்வது நல்லது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
