திங்கள், 7 ஜூன், 2010
ஆஸ்துமாவிற்கு நல்ல தீர்வு
பிரமத்தண்டு பால் 1 துளி கண்ணில் விட்டு வரக் கண் வலி, சதை வளர்தல், கண் சிவத்தல், அரிப்பு, கண் கூச்சம், நீர் வடிதல், கண் எரிச்சல் குணமாகும்.இலை சூரணம், விதை சூரணம் சேர்த்து மிளகளவு 2 வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வர சயம், இருமல், நுரையீரல், சளி இருமல் குணமாகும்.பிரமத்தண்டின் மூலச் சாம்பல் மிளகு அளவு எடுத்து சிறிது தேனில் 2 வேளை சாப்பிட்டு வர இரைப்பிருமல் (ஆஸ்துமா), காசம், கப நோய், நுரையீரல் நோய் குணமாகும்.பிரமத் தண்டின் மூலச் சாம்பலால் பல் தேய்த்து வர பல் ஆட்டம், பல் சொத்தை, சீழ்வடிதல், பல் கரைதல் குணமாகும்.பிரமத்தண்டின் வேரை நிழலில் உலர்த்தி காய வைத்து இடித்துப் பொடியாக்கி சுண்டைக்காய் அளவு வெந்நீரில் சாப்பிட மலப் புழுக்கள் வெளியேறும்.
வெள்ளி, 28 மே, 2010
அம்மை நோயின் தாக்கம் குறைய
தாழம்பூவை துண்டு துண்டாக வெட்டி நீரில் இட்டு காய்ச்ச வேண்டும். நீர் நன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கிய பின் வடிகட்டி, தேவையான சர்க்கரை கூட்டி பாகுபதமாய் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
இதுவே தாழம்பு மணப்பாகு.தாழம்பூ மணப்பாகினை வெயில் காலங்களில் தினசரி உபயோகித்து வர அம்மை நோய் வராமல் தடுக்கலாம்.
அம்மை போடும் போது மருதாணி இலையை அரைத்து இரு பாதங்களிலும் வைத்துக் கட்டி வர அம்மையினால் கண்களுக்கு எந்தவொரு தீங்கும் நேராது. இதனால் அம்மையின் போது ஏற்பட்ட உடல் உஷ்ணம் குறையும்.
வேப்பிலை மிகவும் குளிர்ச்சியான தன்மை கொண்டது. வேப்பிலையுடன் சிறிது மஞ்சளை வைத்து அரைத்து பட்டாணி அளவிற்கு 3 உருண்டைகளை வெறும் வயிற்றில் கொடுத்தால் உடல் குளிர்ச்சி அடையும். அம்மை நோயும் தாக்காது.
இளநீரும், மோரும், அம்மை நோயின் தாக்கத்தை பெருமளவு குறைக்கும். வெறும் வயிற்றில் இளநீர் அருந்துச் செய்வது நல்லது.
இதுவே தாழம்பு மணப்பாகு.தாழம்பூ மணப்பாகினை வெயில் காலங்களில் தினசரி உபயோகித்து வர அம்மை நோய் வராமல் தடுக்கலாம்.
அம்மை போடும் போது மருதாணி இலையை அரைத்து இரு பாதங்களிலும் வைத்துக் கட்டி வர அம்மையினால் கண்களுக்கு எந்தவொரு தீங்கும் நேராது. இதனால் அம்மையின் போது ஏற்பட்ட உடல் உஷ்ணம் குறையும்.
வேப்பிலை மிகவும் குளிர்ச்சியான தன்மை கொண்டது. வேப்பிலையுடன் சிறிது மஞ்சளை வைத்து அரைத்து பட்டாணி அளவிற்கு 3 உருண்டைகளை வெறும் வயிற்றில் கொடுத்தால் உடல் குளிர்ச்சி அடையும். அம்மை நோயும் தாக்காது.
இளநீரும், மோரும், அம்மை நோயின் தாக்கத்தை பெருமளவு குறைக்கும். வெறும் வயிற்றில் இளநீர் அருந்துச் செய்வது நல்லது.
முக அழகிற்கு உதவும் கை வைத்தியம்
திருநீற்றுப் பச்சிலையுடன் பச்சை மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால், முகத்தில் இருக்கும் முகப்பரு, கரும் புள்ளிகள் மறைந்து சருமம் பளிச்சென்று மாறும். சருமம் மிருதுத் தன்மையையும் அடையும்.
திருநீற்றுப் பச்சிலையை அரைத்து முகத்தில் பூசி உலர்ந்த பின் கழுவி வர முகத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கி முகம் பிரகாசமடையும்.
திருநீற்றுப் பச்சிலை சாற்றுடன் கற்பூரவல்லிச் சாறு சேர்த்து சருமத்தில் தடவி வர, தோலில் வந்த கருந்தேமல், தடிப்பு, அரிப்பு ஆகியவை குணமாகும்.
எலுமிச்சை இலையை நரம்பு நீக்கி உளுத்தம் பருப்புடன் சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட பரு வருவது குறையும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வர உடலானது தங்கம் போன்ற மினுமினுப்பைப் பெறும்.
திருநீற்றுப் பச்சிலையை அரைத்து முகத்தில் பூசி உலர்ந்த பின் கழுவி வர முகத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கி முகம் பிரகாசமடையும்.
திருநீற்றுப் பச்சிலை சாற்றுடன் கற்பூரவல்லிச் சாறு சேர்த்து சருமத்தில் தடவி வர, தோலில் வந்த கருந்தேமல், தடிப்பு, அரிப்பு ஆகியவை குணமாகும்.
எலுமிச்சை இலையை நரம்பு நீக்கி உளுத்தம் பருப்புடன் சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட பரு வருவது குறையும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வர உடலானது தங்கம் போன்ற மினுமினுப்பைப் பெறும்.
பெண்களுக்கு பெரிதும் உதவும் கட்டுக்கொடி
கட்டுக்கொடி இலையை பாக்களவு மென்று தின்ன இரத்தபேதி, சீதபேதி, மூலக்கடுப்பு, எரிச்சல் குணமாகும்.
கட்டுக்கொடியிலையை அரைத்து கோலிக்குண்டு அளவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத்தயிருடன் கலந்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் குடித்து வர பெரும்பாடு, இரத்தபோக்கு குணமாகும்.
கட்டுக்கொடியிலை, வேப்பங்கொழுந்து சமஅளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு காலையில் மட்டும் வெந்நீரில் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு (சர்க்கரை நோய்), களைப்பு, ஆயாசம், தேக எரிச்சல், அதிக தாகம், பகு மூத்திரம் குணமாகும்.
சிறுநீரில் காணப்படும் சர்க்கரையின் அளவு நீங்கும். இதையே இடித்துப் பொடியாக்கி சூரணமாகவும் சாப்பிட்டு வரலாம்.
கட்டுக்கொடி இலைச்சாறை அரை லிட்டர் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்த நீருடன் கலந்து வைக்க, சிறிது நேரத்தில் கட்டியாகி விடும். இதை அதிகாலையில் ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வர வெள்ளை, வெட்டை, சீதகக் கழிச்சல், இரத்தக் கழிச்சல் குணமாகும்.
சிறுகட்டுக் கொடியிலையை அதிகாலையில் ஒரு கைப்பிடியளவு எடுத்து மென்று தின்று வர நீர் ஒழுக்கு, நீர்த்தாரை எரிச்சல், வெள்ளை குணமாகும்.
கட்டுக்கொடியிலையை அரைத்து கோலிக்குண்டு அளவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத்தயிருடன் கலந்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் குடித்து வர பெரும்பாடு, இரத்தபோக்கு குணமாகும்.
கட்டுக்கொடியிலை, வேப்பங்கொழுந்து சமஅளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு காலையில் மட்டும் வெந்நீரில் தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு (சர்க்கரை நோய்), களைப்பு, ஆயாசம், தேக எரிச்சல், அதிக தாகம், பகு மூத்திரம் குணமாகும்.
சிறுநீரில் காணப்படும் சர்க்கரையின் அளவு நீங்கும். இதையே இடித்துப் பொடியாக்கி சூரணமாகவும் சாப்பிட்டு வரலாம்.
கட்டுக்கொடி இலைச்சாறை அரை லிட்டர் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்த நீருடன் கலந்து வைக்க, சிறிது நேரத்தில் கட்டியாகி விடும். இதை அதிகாலையில் ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வர வெள்ளை, வெட்டை, சீதகக் கழிச்சல், இரத்தக் கழிச்சல் குணமாகும்.
சிறுகட்டுக் கொடியிலையை அதிகாலையில் ஒரு கைப்பிடியளவு எடுத்து மென்று தின்று வர நீர் ஒழுக்கு, நீர்த்தாரை எரிச்சல், வெள்ளை குணமாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
